சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு எனவும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அக்.3ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
+
Advertisement