Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடி குடும்பம் தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்டம்பர் 15) தமிழ்நாடெங்கும் 68,000க்கும் மேற்பட்ட பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

* ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் சேர்ந்து’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கிறோம்.

* தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

* வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

* நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன். நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

* தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

* ‘பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் -தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.