Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் லோக் அதாலத் 90 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.719 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 90,892 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ.718 கோடியே 74 லட்சத்து 11 ஆயிரத்து 339 பைசல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடந்தது. இந்த அதாலத்தில் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் வழக்கு தொடர்வதற்கு முந்தைய புகார் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், தாலுகா அளவில் 489 அமர்களும் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 498 அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 90,892 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.718 கோடியே 74 லட்சத்து 11 ஆயிரத்து 339 பைசல் செய்யப்பட்டது. லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் வழக்குகளின் மீது உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.