2025-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் சட்ட முன்வடிவு மறுஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: 2025-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். பாரம்பரிய கல்லூரிகள் அடுத்த உயர்நிலையை எட்டுவதை கருத்தில் கொண்டே சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. மாநில இடஒதுக்கீட்டு கொள்கையை கருத்தில் கொள்ளாத நிகர்நிலை பல்கலை.க்கு அனுமதி தரவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
