சென்னை: சரியான சூழலில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் கடந்த 60 ஆண்டுகளை காட்டிலும் நெல் உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது 350 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.
+
Advertisement