சென்னை: ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 வகை திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டம், செமி கண்டக்டர் சோதனை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சிறிய அளவிலான செமி கண்டக்டர் உற்பத்தி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை, பல்லடத்தில் 100 ஏக்கரில் தொழில் பூங்கா அமைகிறது. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
+
Advertisement