தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


