தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


