தாம்பரம் : தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கிண்டியில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லக் கூடிய வழித்தடத்தில் மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்துள்ளது. மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சார ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் அரைமணி நேரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement