தாம்பரம் விமானப்படை தளத்தில் அக்னிவீர் தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு
சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று உடற்தகுதித் தேர்வு காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. காவல்துறை சார்பில் 120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தற்காலிக கழிவறை, குடிநீர் மற்றும் நிழற்குடை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.