உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஒன்றிய அரசு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரபரப்பு குற்றச்சாட்டு!!
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஒன்றிய அரசு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை. தான் விசாரித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்காமல் இருக்க நள்ளிரவில் மனுத்தாக்கல் செய்து ஒத்திவைக்க முயற்சி செய்கின்றனர். நள்ளிரவில் மனு தாக்கல் செய்து வழக்கை ஒத்திவைக்க ஒன்றிய அரசு முயற்சி என நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமனம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
 
   