சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் படிக்கட்டில் பயணம் அல்லது சாகசங்களில் ஈடுபட்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்த உதவிகளுக்கு ரயில்வே உதவி எண் 139 ஐ தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement

