Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒவ்வொரு தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் சேர்ப்பு.. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

டெல்லி : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரம் குறித்து பேசினார். அதில், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வேறு மாதிரி இருந்தாலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. புல்வாமா தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை போன்ற பல காரணங்கள் கருத்துக்கணிப்பு மாற்றத்துக்கு காரணம். தேர்தலுக்கு முன், பின் கருத்துக்கணிப்பு, உண்மையான தேர்தல் முடிவு ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

திடீரென பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மராட்டியத்தில் 5 மாதத்தில் ஏராளமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மராட்டியத்தில் 5 ஆண்டில் சேர்க்கப்பட்டதை விட 5 மாதத்தில் ஏராளமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மராட்டியத்தில் கடைசி நேரத்தில் அதிக வாக்குகள் பதிவானதாக ஆணையம் சொல்கிறது. வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் எந்த வாக்குச்சாவடிகளிலும் அதிகம் கூட்டம் இல்லை. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவிகளை கேட்டபோது ஆணையம் தர மறுத்துவிட்டது. பல தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.

பாஜகவுக்கு சாதகமாக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறிப்பிட்ட அளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது. மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளது. கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில் கிட்டத்தட்ட 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை நாங்கள் ஆய்வு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.