Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2025ம் ஆண்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.