Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

படகு பழுதாகி இலங்கை சென்ற 3 மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: தஞ்சாவூர் மாவட்டம், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேர்ந்த பாயிஸ் அக்ரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் முரளி(30), குமார்(32), ராஜா(53) ஆகியோர் கடந்த அக்.15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் இன்ஜின் பழுதானதால், காற்றின் வேகத்தில் திசைமாறி படகு இலங்கை கடல் எல்லையான யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு பகுதிக்கு சென்றது. இதனால் மூன்று மீனவர்களையும் படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் படகு இன்ஜின் கோளாறால் வழிதவறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 மீனவர்களும் படகுடன் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.