ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து அழிந்தது.
மேலும் காட்டுத்தீயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.