Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

சியோல்: தென் கொரியாவில் பள்ளி மாணவர்களிடைய செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்ற சம்பவங்கள், போதை பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது. இதனால் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங், பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.