Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகனை கொன்று தாய் தற்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எம்.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார்(45). இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரிச்சர்ட் லீமா(40). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், ரிச்சர்ட் லீமா மற்றும் அவரது மகன் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இதனால், மனவேதனையில் இருந்த ரிச்சர்ட் லீமா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் இல்லாவிட்டால் மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என எண்ணி, நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த அவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, சந்திரகுமார் எழுந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கியதையும், மகன் இறந்து கிடந்ததையும் கண்டு கதறினார். தகவலின் பேரில், சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய்- மகன் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.