* உளுந்தை ஊறவைக்கும் முன்பே கழுவ வேண்டும். ஊற வைத்தபின் கழுவினால் சத்துக்கள் வீணாகிவிடும்.
* காபி டிகாஷனில் அரை தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்தால் மணமும் ருசியும் அதிகரிக்கும்.
* மழைநீரில் துணிகளை துவைத்தால் அழுக்கு நீங்கி பளிச்சிடும்.
* அரை ஸ்பூன் சர்க்கரை அல்லது எள் சேர்த்து கீரையை வேகவைத்தால் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.
* உப்பு கரைத்த நீரில் தக்காளி பழங்களை வைத்திருந்தால் அவை அழுகாது.
* வாடிப் போன கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து எடுத்தால் ஃபிரெஷ்ஆகிவிடும்.
* ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் டிரேயின் மீது வெதுவெதுப்பான நீரை விட்டால் ஐஸ் துண்டுகளை சுலபமாக எடுக்கலாம்.
* சுண்ணாம்பை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது, கெட்டவாடையும் வராது.
* சர்க்கரை, இனிப்பு தின்பண்டங்கள் வைத்திருக்கும் டப்பாவை சுற்றி உப்பு, மஞ்சள் தூள் தூவி வைத்தால் எறும்புகள் வராது.
* புட்டு மிருதுவாக இருக்க மூன்றில் இரண்டு பங்கு பச்சரிசியும், மூன்றில் ஒரு பங்கு புழுங்கலரிசியும் சேர்த்து மாவாக்க வேண்டும்.
* மாவடு ஊறுகாய் தயாரிக்கும் போது கொஞ்சம் சுத்தமான விளக்கெண்ணெய் விட்டால் மாவடு நீண்ட நாட்களுக்குக் கெடாது.
* மீனை நீரில் போட்டதும் மூழ்கி விட்டால் அது நல்ல மீன். நீரில் முழ்காமல் மிதந்தால் அது கெட்டுப் போன மீன் என்று அறியலாம்.
* தீப்பெட்டியில் 4, 5 அரிசி போட்டு வைத்தால் தீக்குச்சி நமத்துப் போகாது.
* கடுக்காய் பொடியை நீரில் சற்று நேரம் போட்டு, அந்த நீரால் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் போய் விடும்.
* கோதுமை மாவை சலித்து அதில் கொஞ்சம்் உப்பு தூவி வைத்தால் மாவில் பூச்சி, வண்டு வராமல்இருக்கும்.
* பாலில் சிறிது சமையல் சோடா சேர்த்துக் காய்ச்சினால் பால்திரியாது.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியுடன் கைப்பிடி அவல் சேர்த்தால் சுவை கூடும்.
* முட்டைக் கோைஸ வேகவைத்த தண்ணீரை குடித்துவர குடல் புண்கள் ஆறத் தொடங்கும்.
* கோதுமை மாவில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து பஜ்ஜி போடலாம்.
* ரவை உப்புமா கிளற போகிறீர்களா? பாதிக்கும் பாதி மோரும் சேர்த்துக் கிளறுங்கள். நன்றாக வரும்.
* அரிசி, பருப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* முட்டையின் மேல் எண்ணெய் தடவி வைத்தால் பல நாட்களுக்கு முட்டை கெடாமல் இருக்கும்.
* அரிசி சேர்த்த பால் பாயசம் செய்ய போகிறீர்களா? பாசுமதி அரிசியை உபயோகித்தால் சுவையும், மணமும் ஸ்பெஷலாக இருக்கும்.
- விசாலாட்சி
கண்ணன், ஒசூர்.