Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றுவோம், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்: முதல்வர் டிவிட்

சென்னை: எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றுவோம், நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: எஸ்.ஐ.ஆர்-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம்-களப் போராட்டம். மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூம் ஹெல்ப் லைன். களப் போராட்டத்தில், இன்று(நேற்று) தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும்-கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.