டெல்லி: எஸ்ஐஆர் பணிகளை கவனிக்க சிறப்பு மேற்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பிப்ரவரி.2026 வரை சிறப்பு மேற்பார்வையாளர்கள் பணியாற்றுவர். மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடும், துணை அதிகாரிகளோடும் அவ்வப்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிறப்பு மேற்பார்வையாளர்கள் மாநில, மாவட்ட அளவிலான அரசியல் கட்சித் தலைவர்களோடு ஆலோசனை நடத்துவர்.
+
Advertisement


