Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைப்பொருள் வாங்கியதில் ஹவாலா பணப்பரிமாற்றம்? :நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

சென்னை: போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ​சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் பாரில் கடந்த மே மாதம் இரு தரப்​பினரிடையே நிகழ்ந்த மோதல் வழக்கின் தொடர்ச்சியாக போதைப்​ பொருட்​கள் வாங்கி பயன்​படுத்​தி​யது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

இந்த வழக்​கில் வெளி​நாட்டு கும்​பலுடன் பலருக்கு தொடர்பு இருப்​ப​தால், இதில் பல லட்​சம் ரூபாய் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்​ளிட்டோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தடுப்பு சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கினர். அந்த வகை​யில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்​.28-ம் தேதி​யும், நடிகர் கிருஷ்ணா அக்​.29ம் தேதியும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​ துறை அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அதி​காரி​கள்

சம்​மன் அனுப்பி இருந்​தனர்.

ஆனால், ஸ்ரீகாந்த் நேற்று ஆஜராக​வில்​லை. இதற்​கிடையே, வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று ஸ்ரீ​காந்​த்​ ​சார்​பில்​ அமலாக்​கத்​ துறையிடம்​ கோரிக்​கை வைக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 11ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.