எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது மீனவர்கள் கைதைக் கண்டித்து குடும்பத்தினர் சாலை மறியல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மின் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை குறைந்த படகுகளுடன் மீனவர்கள் மின் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது நெடுந்திவு அருகே மின் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர்களை இலங்கை கடல்படையினர் விரட்டி அடித்ததுடன் எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மற்றும் பாம்பன் நாடு படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மீனவர்கள் கைது செய்ப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பேரும் பரபரப்பு நிலவியது. இலங்கை கடற்படையினர் அத்துமீறல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.