பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து சிறுமி காயம்: கார், ஆட்டோ சேதம்

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து சிறுமி காயம் அடைந்தார். கார், ஆட்டோ ஆகியவையும் சேதம் அடைந்தது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணியளவில் பணிகள் நடைபெற்றபோது அங்குள்ள ஒரு அரச மரம் கீழே சாய்ந்து விழுந்துள்ளது. இதில் அவ்வழியாக...

புழல் மகளிர் சிறை அருகே குடிநீர் குழாய் வெடித்து சாலையில் ராட்சத பள்ளம்: நகருக்குள் புகுந்த வெள்ளம்

புழல்: சென்னை புழல் மகளிர் சிறை அருகில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வாரிய வளாகத்தில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து பூமிக்கு அடியே பைப்லைன் மூலமாக ஜிஎன்டி சாலை, மாதவரம் 200 அடி சாலை வழியே மாதவரம், மணலி, மாத்தூர், கீழ்ப்பாக்கம் உள்பட பல்வேறு சென்னை நகரப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது....

பழவந்தாங்கலில் கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ: கடும் மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

ஆலந்தூர்: பல்லாவரம் மற்றும் பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதி வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை பழவந்தாங்கல், பி.வி.நகர், நேரு நெடுஞ்சாலையில் உள்ள கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழவந்தாங்கலில் உள்ள கன்டோன்மென்ட் குப்பை கிடங்கு நேற்றிரவு திடீரென தீப்பற்றி குப்பைக் கழிவுகள்...

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்று ஜொலிக்கும் சிற்ப நகரம்!

திருப்பூர்: திருப்பூர் என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது பனியன் மற்றும் ஜவுளித் தொழில்தான். ஆனால், அதே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிற்ப நகரமாக ஜொலித்து வருகிறது. மாமல்லபுரம் சிற்பக் கலையின் வணிகத் தலைநகரமாகத் திகழ்ந்து வந்தாலும், சிற்ப உற்பத்தியில் அதையும் தாண்டி முன்னணி வகிப்பது திருமுருகன்பூண்டி எனக் கூறப்படுகிறது. இங்கு...

சிறை உணவில் விஷம் கலந்து கொடுத்ததால் எனக்கு புற்றுநோய்: சிவசேனா எம்பி பகீர் குற்றச்சாட்டு

மும்பை: சிறையில் உணவில் விஷம் கலந்ததால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு எம்பி சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்ரா சால் நில மோசடி வழக்கில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு...

தொல்காப்பியர் பூங்கா பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர்!

சென்னை: சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியர் பூங்காவை பராமரித்து, மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.42...

மருத்துவத்தை சேவையாக மாற்றிய மாமனிதர்: ஒரு குடும்பத்தின் மனிதநேயப் பயணம்!

மருத்துவத்தை வியாபாரமாகப் பார்க்கும் இன்றைய சமூகத்தில், மருத்துவத்தைச் சேவையாக மாற்றி, அதை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஒரு மாமனிதரின் குடும்பம் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரா கோலே, 1985-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வசதியான நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர்,...

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ஹைட்ரஜன் ரயிலை இயக்க இந்திய ரயில்வே புதிய இலக்கு..!

டெல்லி: இந்திய ரயில்வே தனது ஹைட்ரஜன் ரயில்களின் இயக்க வேகத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ வரையிலான வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் (Jind–Sonipat)...

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10, 11ம் தேதி டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் நிகழ்ச்சியை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10, 11 ஆகிய இரு நாட்களும் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் நகரில் எதிர்வரும் 11.09.2026 அன்று நடைபெறும்...