சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு..!!
பெர்ன்: சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து...
ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது தூத்துக்குடி வஉசி துறைமுகம்..!!
தூத்துக்குடி: இந்தியாவிலேயே ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சீனாவின் சின்சோ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 147 காற்றாலை இறகுகள் வெற்றிகரமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இறக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960க்கு விற்பனை!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 வாரத்திற்கும் மேலாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி மற்றும் கடந்த 1ம் தேதி...
ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்ற மொஜ்தபா கமேனி காயம்? இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது பதிலடி தாக்குதல்
துபாய்: ஈரானின் உச்ச தலைவராக பதவியேற்ற ஒரே நாளில் மொஜ்தபா கமேனி காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம், நீண்டகால போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள ஈரான் ராணுவம், இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான...
10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்: 4800 பறக்கும் படை தயார்: செல்போனுக்கு தடை
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 9 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடக்கின்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக பத்தாம்...
தமிழ்நாட்டில் இருந்து என் வாழ்வின் பொற்காலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும்...
12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு ரூ.20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரண தொகுப்பு: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
சென்னை: சென்னையில் உள்ள 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ.20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை கல்லூரி மாணவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, சென்னை...
இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் மாற்றம் சமையல் எரிவாயுவுக்கு முன்னுரிமை: ஒன்றிய அரசு நடவடிக்கை
புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை தணிக்க, சமையல் காஸ் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டிலும் ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட உத்தரவு: ஈரான்...
இயக்குநரை கொன்றது ஏன்? நடிகை பரபரப்பு வாக்குமூலம்
திருக்கோவிலூர்: குறும்பட இயக்குனரை வெட்டிக் கொலை செய்ததாக துணை நடிகை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவரை தீர்த்துக் கட்டியது ஏன் என்று நடிகை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு மதுரா வேடாலம் கிராம எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில் கடந்த 7ம்தேதி அழுகிய நிலையில் ஆண்...
