மர்மவிலங்கு கடித்து இறந்து கிடந்த நாய்; ஆலஞ்சோலையில் சிறுத்தை நடமாட்டமா?: பொதுமக்கள் அச்சம்

அருமனை: அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் பெல்லர் (45). தோட்டம் அமைத்து அதில் வாழை சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் பகல் நேரங்களில் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். மேலும் தோட்டத்தில் இரவு காவலுக்கு 3 நாய்கள் விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிறிய செடியில் கட்டியிருந்த...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் ஸ்டார்கள், குடில்கள், எல்இடி லைட்டுகள் விற்பனை ஜரூர்

கேடிசி நகர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் ஸ்டார்கள், குடில்கள். எல்இடி லைட்டுகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாகயாக கோலாககமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு...

தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்ததால் பரபரப்பு; கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதியா?: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தக்க சமயத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மைசூரு- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை கொச்சி பச்சாளம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் நடுவே ஏதோ ஒரு பொருள் கிடைப்பதை...

14% பெரிதாகவும், பிரகாசத்துடனும் கொடைக்கானலில் `குளிர் முழு நிலவு’: வியந்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு தென்பட்ட `குளிர் முழு நிலவை’ சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான `குளிர் முழு நிலவு’ (FULL COLD MOON) இந்த ஆண்டு டிச.4ம் தேதி, பவுர்ணமியன்று தென்படும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, திண்டுக்கல்...

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் என்பவர் கைது!

கடலூர்: கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் R.நேரு, வயது 46/2025, த/பெ ராமசாமி. இவரின் மாமனார் நாகராஜன் த/பெ சாமித்துரை என்பவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சங்கரன் என்பவரில் தவறாக இருந்துள்ளது. அதனை...

49வது சென்னை புத்தக கண்காட்சி அடுத்தாண்டு தொடக்கத்தில் நடத்த முடிவு!

சென்னை: 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புத்தகக் காட்சி, இந்த ஆண்டும்...

ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு!

  துபாய்: ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர்...

சென்​னை - விளாடிவோஸ்​டாக் வழித்தட திட்டத்தால், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: புடின்

டெல்லி: சென்​னை - விளாடிவோஸ்​டாக் வழித்தட திட்டத்தால், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் 23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை புரிந்துள்ளார். 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை ரஷ்ய அதிபர் இந்தியா...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி!

  சென்னை: வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக 04.12.2025 அன்று அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி குடுத்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 04.12.2025 தேதியிட்ட அறிக்கையில், வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள...

தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்: அரியானாவில் பயங்கரம்

பானிபட்: தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப் பெண், தனது உறவினர்களின் குழந்தைகள் தன்னைவிட அழகாக இருப்பதாகக் கருதி அவர்கள் மீது கடும் பொறாமை கொண்டு வந்துள்ளார்....