Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தண்டவாளத்தில் தலை வைத்து மனைவியுடன் ஆர்டிஓ தற்கொலை: மகள் திருமண விவகாரத்தில் விபரீத முடிவு

நாமக்கல்: நாமக்கல்லில் திருச்சி ஆர்.டி.ஓ., தனது மனைவியுடன் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். மகள் திருமணம் விவகாரத்தில் இந்த விபரீத முடிவு எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் தில்லைபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (56), திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா (55). இவர் மோகனூர் அருகேயுள்ள ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ஆதித்யா (23), புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியவில் ஆர்டிஓ சுப்பிரமணியும், அவரது மனைவி பிரமிளாவும் வீட்டில் இருந்து பைக்கில் வெளியே புறப்பட்டு சென்றனர். அவர்கள், வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வகுரம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று, பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர், இருவரும் தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது சரக்கு ரயில் வருவதை பார்த்ததும், இருவரும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச் சென்றது. இதில், தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே ஆர்டிஓ சுப்பிரமணி, ஆசிரியை பிரமிளா பலியாகினர். அதிகாலை வேளையில் அவ்வழியே வந்தவர்கள் பார்த்து, நாமக்கல் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அவரது புகாரின் பேரில் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடம் வந்து, இருவரது சடலத்தையும் கைப்பற்றி விசாரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணி, பிரமிளா சடலங்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஆர்டிஓ சுப்பிரணியும், அவரது மனைவி பிரமிளாவும் பிஇ படித்து முடித்துள்ள தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதற்காக பல இடங்களில் வரன் பார்த்துள்ளனர். ஆனால், அந்த மாப்பிள்ளைகளை பிடிக்கவில்லை எனமகள் கூறி வந்துள்ளார்.

மேலும், மகள் வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக மகளிடம் கேட்டு நேற்று இரவு இருவரும் தகராறு செய்துள்ளனர். பின்னர் அதிகாலை வேளையில் வீட்டில் மகள் இருக்கும் நிலையில், தனியாக எழுந்து வந்து ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.