Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் 7 வது புதிய குழுவை அமல் படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் நடதி வருகின்றனர்.

ஆனால் இதுவரை நிர்வாகம் இவர்களின் கோரிக்கை நிறவேற்றவில்லை இந்த நிலையில் தங்களின் கோரிக்கை வலியுறுத்தி சாலை போக்கு வரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம் தொடக்கியிருக்கிறார்கள். இந்த போராட்டம் 2 வது நாளாக நடக்கிறது புதுச்சேரி, காரைக்கால் , உள்ளிட்ட நான்கு பகுதிகளில் உள்ள பனிமலையில் வேலை நிறுத்தம் போராட்டம் 2 வது நாளாக தொடர்வதால் அரசு பேருந்துகள் பனிமலையில் நிறுத்திவைக்கப்பட்டன.

சுமார் 144 அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக கிராமபுர பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வந்தது தற்போது இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் கிராமபுர பகுதியை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் நோயாளிகள் என பல்வேறு தரப்பிலும் பாதிக்க பட்டிருக்கிறார்கள் தங்களது கோரிக்கைகள் நிறவேற்றும் வரை வேலை நிறுத்தம் போராட்டம் தொடரும் என்று சாலை போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள்.