Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மான்செஸ்டரில் நாளை 4வது டெஸ்ட் துவக்கம்; இந்திய அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் மான்செஸ்டர் நாளை நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் உத்வேகத்தில் களமிறங்குகிறது. இந்நிலையில் 4வது டெஸ்ட்டில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ராகுல் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்டில் சரியாக விளையாடாததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. தற்போது 3வது இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. கருண் நாயர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் ஏமாற்றி விட்டார். இதனால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காம்பீரை பொறுத்தவரை கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்.

4வது வீரராக கேப்டன் கில் விளையாட உள்ளார். 5வது வீரராக ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடினால், கருண் நாயர் இடத்திற்கு துருவ் ஜூரல் விளையாடக் கூடும். 6வது வீரராக ஆல் ரவுண்டர் ஜடேஜா, 7வதாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. 8வது வீரராக குல்தீப் யாதவ், சர்துல் தாகூர் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு தான் தற்போது பெரிய குறையாக இருக்கின்றது. ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் என இரண்டு வீரர்களும் தற்போது காயம் காரணமாக வெளியேறுகின்றார்கள். இதனால் பும்ரா, சிராஜ் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் விளையாடுவார். ஆனால் 11வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அணியில் ஏற்கனவே இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்கலாமா? இல்லை தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகின்றது.

இந்திய அணி பிளேயிங் லெவன் உத்தேசம்: 1, ஜெய்ஸ்வால், 2, ராகுல், 3, கருண் நாயர்/சாய் சுதர்சன்/ துருவ் ஜூரல், 4, சுப்மன் கில், 5, ரிஷப் பன்ட், 6, ஜடேஜா, 7, வாஷிங்டன் சுந்தர், 8, சர்துல் தாகூர்/ குல்தீப் யாதவ், 9, பும்ரா, 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா.