Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்டி பகுதியை புரட்டிப்போட்ட கனமழை:ஏராளமான வீடுகள் கட்டடடங்கள் சேதம்

சிம்லா: கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் இமாச்சலின் மண்டி பகுதி உருக்குலைந்து காட்சியளிக்கிறது. மண்டி, காங்க்ரா, சம்பா மாவட்டங்களில் கனமழையால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது மண்டி பகுதியில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சண்டிகர் மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மண்டி - குல்லு இடையே போக்குவரத்து முடக்கியது.சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் சேறும் சகதிகளுக்கும் இடையே கார்கள் உருக்குலைந்து கிடைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஏராளமான வீடுகள் கட்டடடங்கள் சேதமடைந்துள்ளது நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது இமாச்சலில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.