Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை : ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், " அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 1,398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அமலாக்கத்துறை வழக்குகளில் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாததால் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் ED தொடர்ந்த வழக்குகளில் 0.13% வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்."எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே, "மோடி அரசு எதிர்க்கட்சிகளை குறிவைக்க ED-ஐ ஒரு தனிப்பட்ட மாஃபியாவாகப் பயன்படுத்தியுள்ளது. ED வழக்குகளில், அப்பாவி மக்கள் கூட ஜாமீன் பெற பல மாதங்கள் ஆகும்.கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவழித்து ஆயிரக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்த பிறகு, ED 10 ஆண்டுகளில் 0.13% மட்டுமே வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. ED என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் கிரிமினல் சிண்டிகேட் தான் தவிர வேறில்லை, அதன் ஒரே பணி பாஜகவுக்காக மிரட்டி பணம் பறித்தல் ஆகும்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.