Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோழி பிடிக்க முயன்ற போது கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி பலி: மணப்பாறை அருகே சோகம்

மணப்பாறை: மணப்பாறை அருகே கோழியை பிடிக்க முயன்ற மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நாகரத்தினம்(60). விவசாய தொழிலாளியான இவருக்கு பாலமுருகன் என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் வளர்த்து வரும் கோழி ஒன்று அருகில் உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒரு திட்டில் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த நாகரத்தினம், வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அதற்கு நாளை பார்த்து கொள்ளலாம் என்று வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் கோழியை மீட்பதற்காக கிணறு இருக்கும் பகுதிக்கு நாகரத்தினம் சென்றார். பின்னர் கோழியை பிடிப்பதற்காக கிணற்று திட்டு பகுதியில் இறங்கினார். அப்போது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்ததும் வையம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி கட்டிலில் கயிறு கட்டி மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.