Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ் என்ற பாஜவின் குற்றச்சாட்டுக்கு அகிலேஷ் யாதவ் பதில்

புதுடெல்லி: ச​மாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ். இவர், நேற்று நாடாளு​மன்​றம் அரு​கே உள்ள மசூ​தி​யில் கட்சி கூட்​டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்​பிள் யாதவ் உட்பட அக்கட்சி தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். இந்த கூட்டத்தில், டிம்​பிள் யாதவ் சாதா​ரண​மாக சேலை கட்டி அமர்ந்​தி ருந்​தார். இதுகுறித்து பாஜ சிறு​பான்​மை​யின மோர்ச்சா அமைப்​பின் தலை​வர் ஜமால் சித்​திக் விமர்த்தித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘மசூதிக்குள் நடை​பெற்ற கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற டிம்​பிள் யாதவ் முறை​யாக ஆடை அணி​யாமல் மசூதி விதி​முறை​களை மீறி விட்​டார். இது இஸ்லாமியர்களின் உணர்வை புண்​படுத்​து​வது போன்​றது. மசூ​திக்​குள் கட்சி கூட்​டம் நடத்தியது கண்​டனத்​துக்​குரியது. மசூ​தி​யின் இமாம் மொஹிபுல்லா நத்வி சமாஜ்​வாதி உறுப்​பினர் என்​ப​தால், அவர் கூட்டத்தை நடத்த அனு​ம​தித்​துள்​ளார்.

எனவே இந்த கூட்​டத்தை நடத்​தி​ய​வர்​கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டும். ஓவைசி போன்ற முஸ்​லிம் பிர​தி​நி​தி​கள் எங்கே சென்றனர். அவர்​கள் அமைதி காப்​பது ஏன்? நாங்களும் வரும் 25-ம் தேதி தொழுகைக்​குப்​பின் கூட்​டம் நடத்தி தேசிய கீதம் பாடு​வோம். அகிலேஷ் யாதவ் மசூ​திக்​குள் கட்சி கூட்​டம் நடத்​தி​யது, முஸ்​லிம்​களின் வழிபாட்டு தலங்​கள் எல்​லாம் தன்​வசம் உள்​ள​தாக நம்புகிறார் என தெரி​கிறது’ என்றார்.

இதுகுறித்து டிம்​பிள் யாதவ் கூறுகை​யில், ‘பாஜ மக்​களை தவறாக வழிநடத்​துகிறது. மசூ​திக்​குள் கட்சி கூட்​டம் நடை​பெற​வில்​லை. தவறாக வழிநடத்​து​வது​தான் பாஜ​வின் நோக்​கம். ஆபரேஷன் சிந்​தூர் உட்பட முக்​கிய விஷ​யங்​கள் குறித்து பேச பாஜ அரசு விரும்​ப​வில்​லை’ என்​றார். அகிலேஷ் யாதவ் கூறுகை​யில், ‘மக்​களை ஒன்​றிணைய விடாமல் பிரிக்​கவே பாஜ விரும்​பு​கிறது. அனைத்து மதத்தின் மீதும் எங்​களுக்கு நம்​பிக்​கை​ உண்​டு. பாஜவின்​ ஒரு ஆயுதம்​​தான் ​மதம்’ என்​றார்​.