புதுடெல்லி: சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிவிப்பு:
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாணவர்கள் பள்ளியில் பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பெறுவதை உறுதிசெய்கிறது. இதற்காக கழிப்பறை தவிர பள்ளியின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், லாபிகள், தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கேண்டீன் பகுதி, ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம் பகுதிகளில் நிகழ்நேர ஆடியோவிஷுவல் பதிவுடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்.
இந்த சிசிடிவி கேமராக்கள் திறன் கொண்ட சேமிப்பு சாதனத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 15 நாட்களுக்கான காட்சிகளை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
