Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீநகர் அருகே 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இதில், 3 பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக என் கவுண்டர் என பாதுகாப்பு படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.