தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, பிரதமர் மோடியிடம் 7 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் மனு
டெல்லி: மணிப்பூரை பிரித்து குக்கி இன மக்களுக்கு சட்டப்பேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, பிரதமர் மோடியிடம் 7 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாங்கள், மீண்டும் ஒருபோதும் அவர்களோடு ஒரே கூரையின் கீழ் வாழ முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.