மதுரை: திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. 100 ஆண்டு மரபுப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் மலை மீது ஏற தடுப்புகளை உடைத்து இந்து முன்னணியினர் செல்ல முயன்றனர். அப்போது; தள்ளுமுள்ளு, ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றபோது தடுத்த போலீசார் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் தொடங்கி மலை உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
அத்துமீறி திருப்பரங்குன்றம் மலை மீது ஏறியவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அமைப்பினர் ஏற முயன்ற நிலையில் ஆட்சியர்144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

