விருதுநகர்: சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் பட்டாசு கழிவுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. தனியார் பட்டாசு ஆலை அருகே கொட்டப்பட்டிருந்த கழிவுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பத்தால் பட்டாசு கழிவுகள் வெடித்து பல கி.மீ. தூரத்துக்கு சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
+
Advertisement