Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

சாத்தனூர் அணையிலிருந்து காலை 10.00 மணியளவில் உபரிநீர் வெளியேயற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் தற்போது (26.11.2025) காலை 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1450 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 28.11.2025 முதல் மூன்று நாட்களுக்கு சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து காலை 10.00 மணியளவில் வினாடிக்கு 2500 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்ற பட உள்ளது.

மேலும் நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.