Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு 6 வழக்கறிஞர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், குமாரசாமி, ஆர்.கிருஷ்ணகுமார், எம்.வேல்முருகன் உள்ளிட்டோர், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? கைது செய்யப்பட்டவர்களை பார்க்ககூட அனுமதியில்லை. மேலும், வழக்கறிஞர்களை கைது செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் நீதிபதிகளிடம் காண்பித்தனர்.

காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், பேருந்துகளை சேதப்படுத்தியதாகவும், பெண் காவலர்களை தாக்கியதாகவும் ஆறு வழக்கறிஞர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கலைந்து செல்ல மறுத்ததால் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால் மட்டுமே அது சட்டவிரோத காவல்.

வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், கைது செய்த பிறகுதான் பேருந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே கைது செய்வதற்கு எந்த காரணங்களும் இல்லை. ஆறு வழக்கறிஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.