Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்

திருவனந்தபுரம்: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நடை திறந்த அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

நாளை (21ம் தேதி) வரை கோயில் நடை திறந்திருக்கும். இதற்கிடையே சபரிமலை கோயில் கீழ்சாந்தியாக பாறசாலை தேவசம் மேல்சாந்தியான ஹரீஷ் போத்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பம்பை கணபதி கோயில் மேல்சாந்திகளாக சங்கரன் நம்பூதிரி மற்றும் விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.