சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உடனடி தரிசன முன்பதிவு 10,000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மழையிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உடனடி முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 நாள்களில் சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 7.25 லட்சத்தை தாண்டியது. பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 5,000ஆக குறைக்கப்பட்டது
+
Advertisement



