ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இழுபறி: பேச்சுவார்த்தைக்கு அழைத்த புதின் - நிராகரித்த ஜெலன்ஸ்கி
வாஷிங்டன்: பேச்சுவார்தைக்கு ரஷியா வருமாறு அதிபர் புதின் விதித்த அழைப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்து விட்டது. வேட்டை அமைப்பை சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா குடுத்த போர் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்காரன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த அனைத்து சமாதானம் முயற்சிகளும் தோல்வி அடைந்தன. போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றல் ரஷ்யா மீது வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் இறுதியில் டிரம்ப் எச்சரித்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அலாஸ்க்காவில் புதினை சந்தித்து பேசிய ட்ரம்ப், கிரிமியா உட்பட ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீண்டும் உக்கிரைன்க்கு வழங்கப்படாது என அறிவித்தார். ஜெலன்ஸ்கி உடனான பேச்சு வார்த்தைக்கு புதின் மேலும் பல நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஷாங்காய் ஒத்தழைப்பு மாநாடு மற்றும் சீனா ராணுவத்தின் இரண்டாவது உலக போர் வெற்றிவிழாவில் பங்கேற்க சீனா சென்ற புதின், தனது பயணத்தின் முடிவில் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் அவரை சந்திக்க தயாராக உள்ளதாக கூறிய புதின், இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினர். உக்கரைன் விவகாரத்தில் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் போர் தொடரும் என்ற தெரிவித்த புதின், அனைத்து பிரச்சனைகளுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு என்று கூறினார். இதனிடையே ரஷ்யாவின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்று உக்கிரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹா கருது தெரிவித்துள்ளார்.
மேலும் உக்கிரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ வரவேண்டும் என்ற புதின் அழைப்பையும் அவர் நிராகரித்து விட்டார். உக்கிரைன்க்கு அமெரிக்க மற்றும் மேற்கத்தி நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் அழைத்து வருவதால், ரஷ்யாவை எதிர்த்து உக்கிரைன் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.