Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.10 கோடி உயர்ரக கஞ்சா சிக்கியது

*பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்டது

திருச்சி : திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவினை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதே விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடைமைகளில் இருந்த பார்சலில் உயர்ரக ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், கஞ்சா கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.

கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கலாம் என என சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் கஞ்சா கடத்தி வந்த நபரிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.