Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி முதலமைச்சர் உத்தரவின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/- ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களிடையே கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும் பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 18.12.2023 முதல் சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3/- வீதம் பால் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ.407.66 கோடி பால் கொள்முதல் ஊக்கத் தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3.80 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் பால் வழங்கி வருகின்றனர். மேலும் தற்போது ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கு பால் கொள்முதல் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்திட தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வருவதால், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி மென்மேலும் பொருளாதார மேம்பாடு அடைந்திடவும், கிராமப் பொருளாதாரம் உயர்ந்திடவும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.