Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணமான 2 மாதத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல்

*வாடிப்பட்டி அருகே பரபரப்பு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே, திருமணமான இரண்டு மாதத்தில் புதுமணப்பெண் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வாடிப்பட்டி அருகே உள்ள சாணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி. இவரது மகன் பிரேம்குமார் (25).

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள அய்யங்கோட்டை புதூரை சேர்ந்த ஞானவேல் மகள் ரூபிணிதேவி (24) என்பவருக்கும் காதல் உருவானது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் ரூபிணிதேவி, கணவர் வீட்டு மாடியில் துணிகளை காயப்போட சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் ரூபிணி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வாடிப்பட்டி காவல் நிலையம் வந்த ரூபிணிதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பிரேம்குமார் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மதுரை - திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்நிலையில் மீண்டும் இரவு ரூபிணி தேவியின் உறவினர்கள் அவரது உடலை மதுரையிலிருந்து வாடிப்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று கூறி, காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் போலீசார் நடதிதிய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.