திருமலை: திருப்பதி மாவட்டத்தின் திம்மநாயுடு பாலம் சரகத்தில் கடந்த 2017ம் ஆண்டு செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதை விசாரித்த திருப்பதி செம்மரக்கடத்தல் சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி நரசிம்மமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அண்ணாமலை விஜயகுமார் நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement


