திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹிரண்தாஸ் முரளி என்ற வேடன். பிரபல ராப் இசை பாடகரான இவருக்கு கேரளா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடகர் வேடன் திருமணம் செய்வதாக கூறி தன்னை கொடூரமான முறையில் பலமுறை பலாத்காரம் செய்ததாக கொச்சியை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து வேடன் மீது கொச்சி திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே மேலும் ஒரு பெண்ணும் இவர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். நேற்று முன்தினம் திருக்காக்கரை காவல் நிலையத்தில் வேடன் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று வேடன் திருக்காக்கரை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் வேடனை போலீசார் கைது செய்தனர். இதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.