ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 303 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது கச்சத்தீவு கடல் பகுதியில் இருந்து நான்கு சிறிய ரக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் தப்பினர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்கள் அப்பகுதியில் இருந்து சென்று தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தனர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையால் நேற்று 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
