ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.176.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.176 கோடியே 59 லட்சம் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.134 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து முதலமைச்சர் ஆற்றிய உரையில்; ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்" என உரையாற்றினார்.