ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரனாரின் நினைவுதினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்த இருசக்கர வாகனங்களில் வரக் கூடாது. திறந்தவெளி வாகனம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வரக் கூடாது. 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 600 இடங்கலில் துகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் எஸ்.பி. பேட்டியளித்தார்.
+
Advertisement