ராமதாஸை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டனர்: அருள் எம்.எல்.ஏ. பேட்டி
சென்னை: ராமதாஸை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டனர் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்; தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டது தொடர்பான புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. ராமதாஸ் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகௗளை அன்புமணி ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். ஒட்டுக்கேட்பு கருவி விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.